What a punch response.. Gr8..... I like this. "சாதனைக்காக இசை என்பதை நான் பெரிசா கருதுவதில்லை"...
Cheers, Siraj On 7/25/08, Kalimuthu <[EMAIL PROTECTED]> wrote: > 1. When will you work with singer Nagoor Hanifa? > > Am waiting for that opportunity. > > 2. Fav. songs in your composition? > > 1. Putham Puthu Bhoomi Vendum > 2. Ella Pugazhum oruvan oruvanukke > 3. Newyork Nagaram > > 3. I want to be your friend, throughout my life. What am I supposed to do? > > If you are a good son to your mother; good husband to your wife; good > father to your children, then you are my friend too..... :) > > 4. Can you compose a song in 24 seconds? > > Dr. Vithur....... RMI (Rahmaniac Multilingual Interface) > > > > 30.07.08 சினிமா > > இசைப்புயலே! தங்கள் இசையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவுக்கு பாட வாய்ப்புக் > கொடுப்பீர்களா? > > கா. தமிழ்ச்செல்வன், கோயம்புத்தூர். > > அந்த வாய்ப்பை எதிர்பார்த்து நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். > > உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு இசை வடிவம் தருவீர்களா? > > சு. ராம்பிரபு, மதுரை. > > திருக்குறள் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு போய்ச் சேரணும்னு ஒரு புது > முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். அதாவது பாடகர் ப்ளாசே அவரோடு சேர்ந்து > கர்நாடிக் ஸ்டைலில் தமிழிலேயே பாடி அதை இங்கிலீஸ் ராப்பில் கொண்டுவரப்போகிறோம். > விரைவில் அதைக் கேட்கலாம். இந்த ஆல்பத்தைத் தயாரிப்பது மட்டுமே நான். > > தங்கள் இசையில் தங்கள் மனதை மிகவும் கவர்ந்த தமிழ்ப்பாடல்கள் எது? > > குணசேகரன், புவனகிரி. > > புத்தம் புது பூமி வேண்டும் - `திருடா திருடா' > > எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே - அழகியதமிழ்மகன். > > நியூயார்க் நகரம்... `ஜில்லுனு ஒரு காதல்' > > உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் > வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும் > > என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு > நிறைவேறுமா இசைப்புயலே? > > புரட்சிநம்பி, அரும்பாக்கம். > > உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு > நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம் > இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான். > > அந்தக் காலத்தில் வந்த `ஸவுண்ட் ஆஃப் மியூஸிக்' படத்தை எவ்வளவு முறை பார்த்து > இருப்பீர்கள்? > > வாசுதேவன், சேலம். > > இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். > ஆனால் இப்போது ஸ்கூலிலேயே அந்த சாங்ஸ் எல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சிட்டாங்க. > > சோம்பலை இசையால் முறிக்க இயலுமா? > > விஜயலட்சுமி, பொழிச்சலூர். > > முடியும்னு நினைக்கிறேன். நான் ஒருதடவை தொடர்ந்து இடைவிடாமல் ஒர்க் > பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவித மனச்சோர்வும், சோம்பலும் ஏற்பட்டபோது > ரேடியோவில் சும்மா ஏதோ ஒரு பட்டனை தட்ட, முஷ்ரத் பதே அலிகானின் கவாலி பாடல்கள் > அதில் ஒலித்தது. இவர் யாருன்னா உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தானிய கவாலிப் பாடகர். > அவரோட குரலும், பாடும் ஸ்டைலும் அதன் வரிகளையும் கேட்டபோது, என்னையும் அறியாமல் > புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டது. > > மவுனம் எப்போது வெற்றியைத் தரும்? > > அலமேலு, ஈரோடு. > > உன்னால் நல்லதைப் பேச முடியலேங்கிறபோது அமைதியாய் இரு. அப்படி அமைதியாய் > இருக்கும்போது நிறைய வம்புதும்புகள் தவிர்க்கப்படும். எண்ணங்கள் சிதறாமல் > இருக்கும். சாதனைகள் புரியலாம். எனவே மவுனமாக இருக்கும்போதுதான் மவுனம் > வெற்றியைத் தரும். > > தமிழ்த்திரையுலகம், ஹிந்தித் திரையுலகம், ஹாலிவுட் திரையுலகம் உங்கள் > பார்வையில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்? > > சுரேஷ். விருகம்பாக்கம். > > ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு. Nothing Succeeds Like Success. எது > வெற்றியடைகிறதோ அதைப் பின்பற்றுவதற்கு நிறையப் பேர் இருக்குறாங்க. அதேபோல் > எதில் அதிக பணம் கிடைக்குமோ அதற்கு வாலண்டியர்ஸ் அதிகம் வருவாங்க. ஹாலிவுட் > எடுத்துக்கொண்டால் அவர்கள் உலகம் பூராவும் வெற்றிகரமா இருக்காங்க. அதனாலதான் > ஒரிஜினாலிட்டியை கண்ட்ரோல் பண்ணவும் ஒரு பெரிய படத்தை எடுத்து உலகம் பூரா > ரசிக்க வைக்கவும் அவர்களால் முடிகிறது. இப்போ நம்ம இந்திய சினிமாவிலும் > அப்படிப்பட்ட ஒரு போக்கு அமைஞ்சிருக்கு. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். > > ஒரு படத்தை 24 மணி நேரத்தில் எடுத்து வெளியிட்டார்கள். அதுபோல் உங்களால் 24 > நொடியில் ஒரு பாடலுக்கு இசையமைக்க முடியுமா? சாதனை படைக்க அவ்வாறு உங்களுக்கு > ஆசை உள்ளதா? > > என். சிவகுமார், சென்னை 28. > > முடியுமா? முடியாதா? என்பது பிரச்னை இல்லை. முதலில் அந்தப் பாடல் உங்களுக்குப் > பிடிக்க வேண்டும். ஒரு நிமிஷத்தில் பத்து டியூன்கள் போடலாம். நான் முன்பு > மியூசிக் பண்ண ஆரம்பித்தபோது, எவ்வளவு ஃபாஸ்ட்டா பண்ணினேன்னு மக்கள் கேட்பதைக் > காட்டிலும் அந்தப் பாடல் எந்த அளவுக்கு அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. நல்லா > இருக்குன்னு ஃபீல் பண்ணணும்னு மட்டுமே நினைச்சேன். குழந்தை பத்து மாதம் > கழித்துப் பிறக்கும்போது அது சுகப் பிரசவம். குழந்தை ஆறு மாதத்தில் > பிறக்கும்போது அது குறைப்பிரசவம். இன்குபேட்டரில் வைத்து அதைக் காப்பாத்த > வேண்டியிருக்குமில்லையா? (சிரிக்கிறார்). அப்படி வேகமா இசையமைத்த ஒரு சில நல்ல > பாடல்கள் வெற்றி பெற்றிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது ஃப்ளூக்கில் கிடைச்ச > வெற்றிதான். சாதனைக்காக இசை என்பதை நான் பெரிசா கருதுவதில்லை. > > > -- > . > > >