▬▬திருக்குறள்▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ஓம் 105. நல்குரவு ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 1. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது. 1041 ஒருவனுக்கு வறுமையைப்போன்று துன்பம் தருவது யாதென்றால் அந்த வறுமையைப் போல துன்பம் தருவது அந்த வறுமையே அன்றி, யாதுமில்லை 2. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ இன்மை எனன ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். 1042 வறுமை என்னும் ஒரு பாவி ஒறுவனிடம் வந்துவிட்டால் இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையிலுள்ள சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும் 3.▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.1043. வறுமை என்னும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன் மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும் புகழையும் கெடுத்துவிடும் 4.▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும். 1044. இழிவான சொல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும். 5. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். 1045 வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பல்வகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும். 6. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ நல்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்பொருள் சோர்வு படும். 1046 நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வுபட்டுவிடும். 7. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும். 1047 அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன். தன் தாயாலும்கூட , ஒரு அயலானைப் போலக் கருதிப் பார்க்கப்படுவான். 8. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.1048 நேற்றுக் கொன்றது போலத் துன்பம் செய்த வறுமையானது இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யாது செய்வேனோ? 9. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. 1049 (மந்திரமும் மருந்தும் இவற்றின் உதவியினால்) நெருப்பில் கிடந்தும் உறங்கலாம்.; ஆனால். வறுமை வந்த போது எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை. 10. ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050 பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றும் துறத்தலே; அதனைச் செய்யாதிருப்பது பிறர் வீட்டு உப்பிற்கும் காடிக்கும் தாம் எமனாவதே ஆகும் ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ அருஞ்சொற்கள்: பாவி, ----,இம்மையும் மறுமையும்-- வள்ளுவரின் வாக்கிலே, 1042 தொல்வரவும், தோலும், நசை 1043 இல்பிறந்தார் 1044 நிரப்பினும் , 1048 கண்பாடு1049 துவரத் துறவாமை1050 ▬▭▬▭▬▭▬▭▬▭▬▭ -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtYmpoR5H-1WTxyBtkm0b0YgtiEBcdGjx1KvXYNrEsCYA%40mail.gmail.com.