---------- Forwarded message ---------- From: p.v. narayanan <> Date: 2016-10-09 19:38 GMT+05:30 Subject: தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது... To:
Thanks to Thyagarajan Paramasivan.: *தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...* *About Sleeping, as told by Saints... * 🌷🌺💐💐💐💐💐🌺 *தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.* *தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.* *இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.* *சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்* *கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை* *நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை* *நம்பிக் காண்* *இதன் விளக்கம் :-* *இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம்**,**தெளிவின்மை**, **ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு**,**பயம்**, **படபடப்பு**,**அக்னி மந்தம்**, **செரியாமை**, * *மலச்சிக்கல்**, **போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.* *எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.* *உத்தமம் கிழக்கு* *ஓங்குயிர் தெற்கு* *மத்திமம் மேற்கு* *மரணம் வடக்கு* *கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.* *தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.* *மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு**, **அதிர்ச்சி* *உண்டாகும்* *.* *வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.* *இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி* *தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்**,**இதயக் கோளாறுகள்**, **நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.* *மேலும் மல்லாந்து கால்களையும்**, **கைகளையும்* *அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்** (**பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.* *குப்புறப் படுக்கக் கூடாது**, **தூங்கவும் கூடாது.* *இடக்கை கீழாகவும்**, **வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை* *நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.* *இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்* *வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான* *வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.* *இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.* *வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.* *இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.* *இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்* *சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே**,* *இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.* *வாழ்க வளமுடன்* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. For more options, visit https://groups.google.com/d/optout.