---------- Forwarded message ----------
From: p.v. narayanan <>
Date: 2016-10-09 19:38 GMT+05:30
Subject: தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
To:


Thanks to Thyagarajan Paramasivan.:

*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...*

*About Sleeping, as told by Saints... *

🌷🌺💐💐💐💐💐🌺


*தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள்
தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.*


*தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில்
ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய
சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.*

*இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி
சித்தர்பாடல் ஒன்று.*


*சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்*
*கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை*
*நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை*
*நம்பிக் காண்*

 *இதன் விளக்கம் :-*


*இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம்**,**தெளிவின்மை**,
**ஐம்புலன்களில்
[உடலில்] சோர்வு**,**பயம்**, **படபடப்பு**,**அக்னி மந்தம்**, **செரியாமை**, *
*மலச்சிக்கல்**, **போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.*


*எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக்
கூறியுள்ளனர்.*


*உத்தமம் கிழக்கு*
*ஓங்குயிர் தெற்கு*
*மத்திமம் மேற்கு*
*மரணம் வடக்கு*
*கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.*

 *தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.*

  *மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு**, **அதிர்ச்சி* *உண்டாகும்*
*.*

 *வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.*


*இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து
வரும் காந்தசக்தி* *தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும்.
இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்**,**இதயக் கோளாறுகள்**, **நரம்புத்தளர்ச்சி
உண்டாகும்.*

*மேலும் மல்லாந்து கால்களையும்**, **கைகளையும்* *அகட்டி வைத்துக் கொண்டு
தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்** (**பிராண வாயு)
உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.*

*குப்புறப் படுக்கக் கூடாது**,  **தூங்கவும் கூடாது.*

*இடக்கை கீழாகவும்**, **வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை*
*நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.*
*இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம்
மட்டுமே சுவாசம்* *வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால்
உடலுக்குத் தேவையான* *வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து
உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.*

*இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.*


*வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை
சுவாசம் ஓடும்.*


*இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி
உண்டாகும்.*


*இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்*


*சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே**,*

 *இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.*

*வாழ்க வளமுடன்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to