அருள் விருந்து - ஆசைகளை அகற்றும் அளவு ஒருவன் தூயவனாகிறான். - தெய்வத்தை நம்புவதால் உள்ளத்தில் உறுதியும் நேர்மையும் இயல்பாகவே உண்டாகின்றன. - ஒரு நாட்டில் சட்டம் அதிகரிக்கும் அளவு குற்றம் செய்யும் தன்மையும் மக்களுக்கிடையில் அதிகரிக்கும். - வற்றாத ஊற்றாயிருந்து வழங்கவல்லது தேங்கிய மனம்.அக்ஷய பாத்திரம் என்று இயம்பப் படுவதும் அதுவே. - மன்னுயிரின் நலத்தில் தன்னுயிரை மறந்திருக்கும் வேளையில்தான் மனிதன் உண்மையாக வாழ்ந்திருக்கிறான். - சோம்பித்திரிபவன் சான்றோன் ஆவதில்லை. பேருழைப்பிக்கிடையில் அமைதியுற்றிருப்பவன் சான்றோன் ஆகிறான். - தேட்டையுள் (செல்வத்துள்) பெரியது அமைதி. அமைதியுற்றிருப்பவன் அனைத்தையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். - கட்டிடம் ஒன்றின் அஸ்திவாரம் பூமியுள் ஆழ்ந்து புதையுமளவு அது மேலே எழ வல்லதாகிறது. பணியுமளவு ஒருவன் மேலோன் ஆகிறான். - சேவை செய்யாதவர்களுக்கு வாழ்க்கை வெற்றியுடையதாகாது. சேவை செய்கின்றவகளுக்கு வெற்றியும் மனத் தூய்மையும் உண்டாகின்றன. - யாசகன் ஒருவன் அருவருப்பை உண்டு பண்ணுகிறான். தாராளமான மனப்பான்மை அடையாத பணக்காரனோ அதைவிடப் பெரிய அருவருப்பை உண்டுபண்ணுகிறான். - தங்களை அறியாமலும், விளம்பரம் செய்யாமலும் பக்தர்கள் உலகுக்கு உதவி புரிகின்றனர். அவர்கள் புரிகின்ற உதவிக்கு நிகரானது வேறு எதுவும் எவ்வுலகிலும் இல்லை. - -=-=-=-=-=-=-=-=-=-= தவத்திரு சித்பவானந்தர் அவர்களின் அருள்விருந்து .
-- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. For more options, visit https://groups.google.com/d/optout.