மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை)
சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.


[image: maha shivaratri images க்கான பட முடிவு]

சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவை
சோம வார விரதம் திருவாதிரை உமா மகேசுவர விரதம் மகா சிவராத்திரி விரதம் கேதார
விரதம் கல்யாண விரதம் சூல விரதம் ரிசப விரதம் என்பனவையாகும்.

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே
இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.


*பஞ்ச ராத்திரிகள்: *
சிவனுக்குரிய ராத்திரிகள்இ நித்ய சிவராத்திரி பட்ச சிவராத்திரிஇ மாத
சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம்
தேய்பிறைஇ சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா
சிவராத்திரி என பெயர் பெற்றது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார்
பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
உலகங்களே தோன்றவில்லை .பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால்
சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில்இ இரவுப்
பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு
ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின்
முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவைஇ
தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது ஹசிவராத்திரி’ என்றே
கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும்
வரை தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு
எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும்.
அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே
ஹசிவராத்திரி’ என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது
பரமேஸ்வரனுக்கும் இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது
நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி
கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. அம்பிகையைத் தொடர்ந்து
நந்தியம் பெருமான்இ சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள்
விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

இரவு நான்கு ஜாமங்களில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இரவு
11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று
சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக
கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும்
ஆன்மாவுக்கும் உகந்ததாகும்.


*சிவராத்திரி வரலாறு: *
புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளது.
சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில்
மூழ்கின. அந்த நாளே சிவராத்திரி என்பர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான்
திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை
வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்தரி என கூறுவர். மார்க்கண்டேயன் உயிரை
காக்க சிவன்இ எமனை காலால் உதைத்தார். அதன்பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள்
வேண்டினர். அந்த நாளை சிவராத்திரி என்னும் கூறப்படுகிறது. அடிமுடி
காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக
சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என கருதப்படுகிறது.

மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி
அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண
பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி,
வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு
உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது
மகா சிவ ராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம் கந்த
புராணம் பத்ம புராணம் அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியின் மகிமை மகா சிவராத்திரியின்
மேன்மையை ஆகமங்கள் சிவமகா புராணம் ஸ்காந்தம் பத்மம் உள்ளிட்ட பத்து
புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு
கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*விரதமுறை *
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன்இ தெரிந்தே
பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான்
சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம்
கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது நூறு
அசுவமேத யாகம் செய்வது பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும்
மேற்கொண்டாலும்இ ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி
அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்ட சூரிய உதயத்தின் போது காலையில்
வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை
செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில்
சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச்
செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும்.
வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம்.
வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன்
பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை
பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு
பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து கையில்
உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச்
சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப்
பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ சர்வ ஈசான பசுபதி உக்ர ருத்ர
பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர
நாமத்தை சொல்வதுடன் வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை
கோயில்களுக்கும் வழங்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ ருத்ர பசுபதி நீலகண்டா
மகேஸ்வரா ஹரிகேசா விருபாக்ஷா சாம்பு சூலினா உக்ராபீமா மகாதேவா ஆகிய 12
பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக
வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள்
விடியற்காலையில் நீராடிஇ காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும்
அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு
உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும்
விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க
முடியாதோர் ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர் பால் பழங்களை உண்ணலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும்
சிவத்துதிகளைச் சொல்லியும் சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும்
சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ
பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை
முடித்துஇ அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்
பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும் வாழ்வில்
முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம்
இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும்
இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி
அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை
அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும்
என்பது சித்தர்கள் வாக்கு.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to