ஓம் <><><><><><><><><><><பெரிய புராணம்<><><><><><><><><><><><><><><><> *இறைவன் அடியெடுத்தக் கொடுத்த பாடல்*. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் நில உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% திரு ஜெயமோகன் அவர்கள் தந்த விளக்கம்:- உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணர முடியாதவன்.... ’உலகில் உள்ள எவராலும் உணர முடியாதவன்’ என முதல் வரியில் நிறுவுகின்றார். அறிவிற்கு அப்பாற்பட்டவனாக ஈசனை கற்பிதம் செய்கிறார்.
அடுத்த வரியில் நிலவைச் சூடியவன். கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறார். அடுத்தவரி, எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில்.. அடுத்த வரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது. அருவமும். உருவமும் ஆனவனின் மலர்ப் பாதங்களைப் பணிவோமென அறைகூவுகிறத இந்தப் பாடல். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.... பெரிய புராணம். . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdshnSJoX5TwNPNvvhL9m9R8XyB-JdameBwoKD6Psu044Q%40mail.gmail.com.