Glad you liked it! Actually he was the person who was in the assembly of Madras. Once he said half the members are fools; and the speaker wanted him to apologise; so next day in the opening speech, he simply said ;half of the assembly members are not fools" So stressed the same thing and considered it as an apology. KR IRS 7 1 24
On Sun, 7 Jan 2024 at 11:51, Rama <[email protected]> wrote: > Very interesting read Sh Sridharan Ji. > Ys I have read about Srinivasa Shastri . Thanks for sharing. > > > On Sun, 7 Jan 2024 at 11:15, Rajaram Krishnamurthy <[email protected]> > wrote: > >> >> >> ---------- Forwarded message --------- >> From: Srinivasan Sridharan <[email protected]> >> Date: Sat, 6 Jan 2024 at 23:01 >> Subject: Fwd: SILVER TONGUE >> To: Rajaram Krishnamurthy <[email protected]>, Devarajan Subramaniam >> <[email protected]> >> >> >> The silver tonghued orator is really great and the Hall of fame named >> after him in Mylapore near luz round tana I visity often KR IRS 7124 >> >> *Date:* January 6, 2024 at 5:47:12 AM PST >> *From:* sridharan <[email protected]> >> *Subject:* *SILVER TONGUE* >> >> >> கடைசி வரை காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்றே சர்ச்சில் கிண்டலடித்தார். >> >> அந்த சர்ச்சிலுக்கு 1890-களில் சென்னையிலிருந்து கடிதம் எழுதி YOU SPEAK BAD >> ENGLISH என்று குற்றம் சாட்டினார் ஒருவர். >> >> ‘WHO ARE YOU? WHERE ARE YOU? என்று சர்ச்சில் விசாரிக்க, நான் >> தமிழ்நாட்டில் சென்னை திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர்!’ என்றார். >> >> உடனே அவரை இங்கிலாந்து வரச்சொன்னார் சர்ச்சில். இவர் போனார். >> >> ஒரு மேடையில் இலக்கணப் பிழையுடன் சர்ச்சில் பேசியதை இவர் விளக்கிச் சொல்ல >> மிரண்டு போய்விட்டார் சர்ச்சில். என் தாய்மொழியை அயல்நாட்டான் கற்றுக் கொண்டு >> என் பேச்சிலேயே தவறு கண்டுபிடிக்கிறாயா? நீ யார் -உன் பூர்வீகம் எது?’ என்று >> திரும்பக் கேட்டார். >> >> ‘கும்பகோணம் அருகே வலங்கைமான் கிராமத்தில் கோயிலில் பூஜை செய்யும் >> சாஸ்திரியின் மகன். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு, சென்னை பச்சையப்பன் >> கல்லூரியில் பட்டப்படிப்பு, சேலத்தில் முனிசிபல் கல்லூரியில் பேராசிரியராக >> கொஞ்ச நாள். இப்போது திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டர். என் >> பெயர் சீனிவாச சாஸ்திரி!’ என்றார். >> >> ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் சர்ச்சில். >> >> ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகம் போல ஜே.சி.நெஸ்பீல்டு >> ஆங்கில இலக்கண நூல் தயாரித்திருக்கிறோம். ஒரு முறை சரிபார்த்துச் சொல்லுங்கள் >> என்று கொடுத்தனர். இரவெல்லாம் படித்து 4, 5 அத்தியாயங்கள் தரக்குறைவாக உள்ளன’ >> என்று மாற்றி எழுதிக் கொடுத்தாராம். >> >> ஆங்கில மொழிப் புலமையில் -ஆங்கிலப் பேச்சாற்றலில் இந்த நூற்றாண்டில் உலகில் >> சிறந்த பேச்சாளர்கள் 5 பேரில் நீங்களும் ஒருவர் என்று மரியாதை செய்து -தாமஸ் >> ஸ்மார்ட் என்பவர் பிரிட்டீஷ் அரசின் சில்வர்டங் அரேட்டர் -வெள்ளி நாக்குப் >> பேச்சாளர் என்று பட்டம் கொடுத்து அனுப்பினார். >> >> இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பல பதவிகள் வகித்தவர். >> தென்னாப்பிரிக்காவில் பிரிட்டீஷ் அரசின் இந்தியப் பிரதிநிதியாக கொஞ்ச நாள் >> இருந்தார். >> >> கோபாலகிருஷ்ண கோகலேவின் அரசியல் பார்வையில் ஈர்க்கப்பட்டு அவரது சீடர் என்று >> சொல்லிக்கொண்டார். மகாத்மா காந்தியை விட 10 நாள் முன்னதாகப் பிறந்தார். >> காந்திஜி அக்டோபர் 2-ல் பிறந்தார். இவர் செப்டம்பர் 22-ல் பிறந்தார். அதனால் >> அண்ணா என்றே சாஸ்திரியை காந்தி அழைப்பார். >> >> ‘பார் -அட் லா’ படித்த உனது ஆங்கிலம் தரமாக இல்லை என்று சாஸ்திரி சொல்ல, தன் >> வரலாற்று நூலான சத்தியசோதனை- ஆங்கிலப் புத்தகத்தைத் திருத்தித் தரக் கேட்டுக் >> கொண்டார் காந்தி. >> >> அதேபோல அரசியல் செய்திகளைச் சொல்ல ‘ஹரிஜன்’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார் >> காந்தி. மாதாமாதம் அந்த புரூஃபை சாஸ்திரிக்கு 2- வாரம் முன்னரே அனுப்பி >> திருத்தி அவர் அனுப்பிய பின்னரே அச்சுக்குக் கொடுத்தார் காந்தி. >> >> ஒரு தரம் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்க, குஜராத்தில் >> ஆனந்த் நகரில் நடக்கவிருந்த ஒரு மாநாட்டுக்கு வரச்சொன்னார் காந்தி. சாஸ்திரி >> போனார். >> >> கட்டுக்கடங்காத கூட்டம். ஐயாயிரமோ, பத்தாயிரமோ அத்தனையும் ஏழை விவசாயிகள். >> பாட்டாளிகள். அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து >> சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார் சாஸ்திரி. >> >> ‘இனிமேல் ஹரிஜன் புரூஃப் எனக்கு அனுப்ப வேண்டாம். நீங்களே திருத்திக் >> கொள்ளுங்கள்!’ என்று காந்திக்கு கடிதம் எழுதினார். >> >> ‘அண்ணா! நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?’ என்று காந்தி கேட்டார். இல்லை. >> என்னிடம் கேவலம் இங்கிலீஷ் மட்டும்தான் உள்ளது. உங்களிடம் ஆன்மா உள்ளது. ஆன்மா >> சொல்வதுதான் வேதம். நீங்கள் சொல்வது சத்தியம். தொடருங்கள்!’ என்றார். >> >> ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரதமரே மெச்சும் அளவுக்கு சாஸ்திரியின் >> ஆங்கிலப் புலமை இருந்துள்ளது. கற்றறிந்த பெரியோர் முன்பு தன் ஆற்றலைத் >> துணிந்து வெளிப்படுத்தும் ஒருவனே கற்றவர்களிலெல்லாம் சிறந்தவன் என்கிறார் >> வள்ளுவர்: >> >> ‘கற்றாருள் கற்றார் எனப்படுபவர் -கற்றார் முன் >> >> கற்ற செலச் சொல்லுவார்’ >> >> > > -- > *Ramaswamy* > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop4FtXcyhbMz4gC_z6xOQ1pYFDvVJpKKFuxPP9rhtpGrQ%40mail.gmail.com.
