Hahaha

On Wed, Jul 3, 2024, 13:20 Narayanaswamy Sekar <nsekar...@gmail.com> wrote:

>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <nseka...@yahoo.com>
> Date: Wed, Jul 3, 2024, 11:49 AM
> Subject: Fwd - Last Q & A are not to be missed
> To: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. <
> tncrangara...@yahoo.com>, Chittanandam V. R. <chittananda...@gmail.com>,
> Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, Narayanaswamy Sekar <
> nsekar...@gmail.com>, Mani APS <m...@manijpn.in>, Srinivasan Sridharan <
> sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM <vabal...@gmail.com>, Rama (Iyer
> 123 Group) <kaviran...@gmail.com>
>
>
> *கேட்டாம்பாரு ஒரு கேள்வி...*
>
> *அதுக்கு சொன்னான் பாரு ஒரு பதிலு...*
>
> 😀 😀 😀 😀 😀
>
> உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச
> சந்தர்ப்பம் கிடைத்தது.
>
> முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.?🙂
>
> கடவுள் : தாராளமாகக் கேள் மகனே..
>
> முருகேசு : பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..?
>
> கடவுள் : கண்டிப்பாக..
>
> முருகேசு : இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக்
> கொடுத்தீங்க..?😐
>
> கடவுள் : என்னப்பா சொல்ற நீ..?
>
> முருகேசு : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே
> லேட்.. !
>
> கடவுள் : ஆமாம்..! அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டுட்ட..
>
> முருகேசு : கிளம்பினதே லேட்.. இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..😢
>
> கடவுள் : ஆமாம்.. எனக்குத் தெரியும்.
>
> முருகேசு : சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல..
> ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு நான் ஒரு மணிநேரம் லேட்.😨
>
> கடவுள் : ஆமாம்..! தெரியுமே..
>
> முருகேசு : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல
> சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா
> சாப்பிட்டுட்டு வந்தேன்.😤
>
> கடவுள் : ஆமாம், அதுவும் தெரியும்.
>
>  வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே
> இருந்து நான் ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு
> திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ்
> இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.😟
>
> கடவுள் : ஆமாம், தெரியும்.
>
> முருகேசு : அதை பிடிச்சி.. இதை பிடிச்சி.. முட்டி மோதி வீட்டுக்கு வந்து,
> கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து. டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ்
> பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் போல. வேலையே செய்யல..😖
>
> இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு
> இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..?😭
>
> (கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து பேச ஆரம்பிக்கிறார்)
>
> கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து
> தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட
> வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க
> வெச்சேன்.
>
> முருகேசு : (அதிர்ச்சியுடன்) ஓ....!!!😳😳
>
> கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது.. நீ போற
> ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா
> இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல
> போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..
>
> முருகேசு : (அடக்கத்துடன்) ஓ..😦
>
> கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா
> மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி
> விழுந்துடிச்சு..! யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா
> என்னாயிருக்கும்..?
>
> முருகேசு : (கண்கலங்கியபடி) ம்ம்..!!!😰
>
> கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர்
> உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே
> அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் ஃபோனை
>
> முருகேசு : ம்ம்...😧
>
> கடவுள் : அப்புறம், அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற
> முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன்
> எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி
> எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.
>
> என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை
> தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ
> என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.
>
> முருகேசு : இத்தனை ஆபத்துலேர்ந்து என்னை காப்பாத்துனீங்களே..!😞
> ஆனா என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க ??
>
> 😨😨😡😡😡
>
> *கேட்டாம்பாரு ஒரு கேள்வி*...
> 👆👆👆 கடவுள் குடுத்தாரு பாரு ஒரு பதில்::: மவனே நீ சாமி கும்பிட
> ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்கப்பறம் தானே!! 😀😀
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to thatha_patty+unsubscr...@googlegroups.com.
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfcG%2Bp-NiXqeptxRPdhqP_4ZknuofAsC81OQsHi0OsDiQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfcG%2Bp-NiXqeptxRPdhqP_4ZknuofAsC81OQsHi0OsDiQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWo%2BDy6JdTvgRaRdMZe0QaNj6EfaigM6ZL3p8xrZ4s1J6gg%40mail.gmail.com.

Reply via email to