---------- Forwarded message ----------
From: p.v. narayanan
Date: 2015-11-04 7:23 GMT-08:00
Subject: Maha Periyava
To:


Thanks to Narayanan Hariharan :


Chamarthi Srinivas
<https://www.facebook.com/chamarthis/posts/10207036755064711?fref=nf>
5 hrs
<https://www.facebook.com/photo.php?fbid=10207036754904707&set=a.10204296218113000.1073741825.1455184730&type=3>
 ·

ஒங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை!

பாரதத்தின் அப்போதைய ப்ரதமர் நரஸிம்ஹராவ் ஸ்ரீ மடத்துக்கு வருவதாக தகவல்
வந்தது.

வழக்கம் போல் பெரியவாளை மொய்த்துக்கொண்டு ஏராளமானபக்தர்கள். ப்ரதமர்
வரப்போகிறார் என்பதால், காவல்துறை பணியாளர்கள் அந்த பக்தர்களை துரத்தினார்கள்.

'இந்தாங்க....ப்ரதம மந்திரி வராங்க.... எல்லாரும் வெளிய போங்க! சீக்கிரமா
எடத்தை காலி பண்ணுங்க"

கூச்சல் போட்டு, ஏதோ குற்றவாளிகளைப் போல், பக்தர்களை, பிடித்துத் தள்ளாத
குறையாக விரட்டினார்கள்.

"ஏங்க, நாங்களும் பெரியவாளை தர்ஶனம் பண்ணத்தானே வந்திருக்கோம்?...இப்டி
வெரட்டறீங்களே!.."

சில பக்தர்கள் மனம் நொந்து சொன்னார்கள்.

உண்மைதானே! அன்றாட வாழ்க்கையில்தான்,பொது இடங்கள், கோவில்கள் என்று எல்லா
இடத்திலும், அரசியல்வாதிகளின் தொந்தரவு அதிகம் என்றால், மனஶாந்திக்காக,
வாழ்வில் துன்பம் தாங்காமல், ஒரே ஆதாரமாக தேடி ஓடி வரும் பெரியவா இருக்கும்
இடத்திலுமா அரசியல் அதிகாரம்?

பெரியவா இந்தக் கூத்தை கவனிக்காமல் இல்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக பார்த்துக்
கொண்டிருந்தார். பிறகு ஒரு காவல்துறை அதிகாரியை கூப்பிட்டார்.

"பாருங்கோ....இவாள்ளாம் ரொம்ப ஸாமான்ய ஜனங்கள். என்னை பாக்கணுன்னு
வெளியூர்லேர்ந்தெல்லாம் வந்திருக்கா. இங்க வர்றதுக்காக அவா எத்தன
கஷ்டப்பட்டிருப்பாளோ! இவாளை இங்கேர்ந்து வெளியேத்த ஒங்களுக்கு எந்த அதிகாரமும்
இல்லை.! இது ஸ்ரீமடம், private property! இப்போ வெளில தொரத்தினவா அத்தனை
பேரையும் உள்ளே அனுப்புங்கோ. ப்ரதமருக்கு ஸெக்யூரிட்டி குடுக்கறது மட்டுந்தான்
ஒங்க duty ! அவர் வரச்சே அவரை ஜாக்ரதையா அழைச்சுண்டு வாங்கோ! அது போறும் .
ஸ்ரீ மடம் பக்தாள வெளியேத்த ஒங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை"

திட்ட வட்டமாக அதிரடி உத்தரவு போட்டார்!

அண்டாண்டகோடியோட ஆதார புருஷர் சொன்ன பிறகு appeal ஏது? துரத்தின போலீஸே,
வெளியே வந்து அங்கிருந்தவர்களிடம், "வாங்க, உள்ள போங்க..." என்றனர்.

தெய்வம் இருக்குதடி பாப்பா! தெய்வக்கவி பாடிய அனுபவப்பாடம், நம் வாழ்வில்
ஒவ்வொரு க்ஷணமும் நமக்கு தெம்பைத் தரும்!

பெரியவாளின் பக்தவாத்ஸல்யம் எல்லை கடந்தால், நம்மை எதுவும், யாரும் ஒன்றுமே
செய்ய முடியாது

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to