a WISHFUL THINKING. When people are at the peak, all praise them to be
within the pool. KR

On Thu, 18 Jan 2024 at 06:47, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *இசைஞானி இளையராஜா பற்றி: சுஜாதா*
>
> (அம்பலம் இணைய இதழில், 12.6.2005)
>
> *இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் 'சிம்பொனி' அனுபவத்தைப்
> பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம்.*
>
> *இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. 
> **முதன்முதலாக
> காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில்
> கம்போசிங்கின் போதும், சென்னையில் யேசுதாஸின் முதல் ஸ்டீரியோ ஸ்டுடியோவில்
> ரிக்கார்டிங்கின்போதும் - ஆர்வமுள்ள, முன்னேறத் துடிக்கும், எந்த சவாலையும்
> சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்.*
>
> * இன்னமும் ஞாபகம் இருக்கிறது. **அப்போதெல்லாம் சின்தஸைஸர் மிக
> மிகக் குறைவாகத்தான் பயன்படுத்தப்பட்டது.  வயலின் என்றால் நிஜ வயலின்கள்,
> ப்ளூட் என்றால் நிஜ  ப்ளூட். கித்தாரும்  அப்படியே. ரிக்கார்டிங்
> ஸ்டுடியோவில் **இசைக் கலைஞர்கள் கூட்டம் பெரும் வட்டமாக இருக்கும்.
> ட்ராக்கில் பாடுவதெல்லாம் கிடையாது. கான்சோலில்  இசை அமைப்பாளர் வீற்றிருக்க,
> உள்ளே ஒரு அரேஞ்சர் இருப்பார். அப்போதே, ராஜா எல்லோருக்கும் நோட்ஸ் எழுதிக்
> கொடுப்பார் - உள்ளூர் வாத்தியங்களுக்கு ஸ்வரங்களாகவும், வெஸ்டர்னுக்கு
> நொட்டேஷனிலும்.*
>
> *எந்த மூலையில், எத்தனை லேசான பிசிறு  இருந்தாலும் அவரது நுட்பமான,
> தீட்டப்பட்ட காதுகளுக்குக் கேட்டு விடும். **கட் பண்ணி விட்டு, "என்ன
> கோதண்டம், பிசிறு  கேக்குதே ! சரியா ட்யூன் பண்ணிக்கலையா ?"  இது ஒரு இன்பமான,
> வினோதமான அனுபவம். அங்கங்கே  ஞீ  ஞா என்று ஆளாளுக்கு ஒத்திகை பார்த்துக்
> கொண்டிருக்க,  "ஓகே ! டேக் போகலாமா ? " என்றதும் நிசப்தமாகும். ஒன்… டூ… என்று
> கை சொடுக்கினால் முடிவில், திடீர் என்று ஒரே நேரத்தில் அத்தனை பேரும்
> ஒத்திசைத்து சங்கீதம் புயலாக வெடிக்கும். அந்தத் திடீர்த்  துடிப்பு
> வேறெதிலும்  கிடைக்காதது.*
>
> *ராஜாவின் முன்னேற்றத்தைப் படிப்படியாக கவனித்து வந்திருக்கிறேன். அவரிடம்
> இருந்த மேதமை, உலகளாவிய நண்பர்களை அவருக்குத் தந்திருக்கிறது. மெல்ல மெல்ல
> அவர் தன்  வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கும்போது, வேறு ஏதோ ஒரு உயர்ந்த
> காரியத்திற்குத் தான் படைக்கப்பட்டிருப்பதை உள்ளுணர்வில்  கண்டிருக்கிறார்.*
>
> * திருவாசகத்தில் உள்ள பக்தி ரசத்தையும், ஈசனிடம் உண்மையான சரணாகதியையும்
> உணர்ந்து அவர் பாடியிருக்கும் ஆரடோரியோ, ராஜாவின் இசைப் பயணத்தில் ஒரு மிக
> முக்கியமான திருப்பம். இனிமேல் அவர் செய்ய இருப்பதற்கெல்லாம் கட்டியம்.*
>
> *ராஜா ஒரு முழுமையான சிம்பொனியை எழுதக் கூடியவர். அதே போல் சிக்கலான
> மேற்கத்திய அமைப்பில் கிழக்கத்திய இலக்கியங்களின் சுவையை இணைக்கும் திறமை
> இவரிடம்தான் காண முடிகிறது. *
>
> *விளைவாக, சிலப்பதிகாரம் ஒரு ஆப்பெராவாக (Opera) வெளிவந்தால் ஆச்சரியப்பட
> மாட்டேன். நம்மாழ்வாரின் சூழ்விசும்பு பாசுரங்களை தூரியம் முழங்க,
> பில்ஹார்மோனிக் இசையில் பரமபதத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லலாம்.*
>
> *ராஜாவின் முழுமேதைமை வெளிநாட்டில்தான் முதலில் வெளிப்படும். தென்னாட்டில்
> அறியப்படும்.*
> *திருவாசகம் சிடியை வாங்கிக் கேட்டுப் பாருங்கள்.*
>
> *- சுஜாதா*
>
> **************************
>
> வலையில் பிடித்தது
>
> சித்தானந்தம்
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop%2B1XrxiP%3DM%2BZT%2B2-7CtEr7esqRVYjxT5fg2UdiXLP2vQ%40mail.gmail.com.

Reply via email to